Monday, July 27, 2009

அறிமுகம்

என்னுடைய உணர்வுகளையும் விருப்பங்களையும் பதிவு செய்ய விரும்பினேன்.. அதற்கான முயற்சி தான் இது...
Disclaimer: இது யாருக்கேனும் நேர விரயத்தையோ / சலிப்பையோ ஏற்படுத்தினால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்


காதல்

நீ என்னை பார்க்க வரும் நாட்களில் மட்டும்
மஞ்சள் பூசுவதற்கு காரணம் - வெட்கத்தால்
உன் முகம் சிவந்து விடுவதை மறைப்பதற்கு தானே..!
__________________________________________________________________________________

இன்று ஏன் முருகன் கோயிலில் இவ்வளவு கூட்டமாய் இருக்கிறது
என்று கேட்கிறாய். நீ முருகனை பார்க்க வருகிறாய் என்று
தெரிந்து கூடிய கூட்டம் தான் அது என்று அந்த
முருகனுக்கு கூட தெரியும்
__________________________________________________________________________________

திகில் படம் பார்க்கும் போது நீ காட்டும்
முக பாவனைகளை வைத்தே ஒரு
ரொமான்டிக் படம் எடுக்கலாம்
போலிருக்கிறதே..!
__________________________________________________________________________________

நீ கடும் வெயிலில் நடந்து வருவதை
பொறுக்க முடியாமல் பூமி இவ்வளவு நேரம்
குலுங்கிக் கொண்டிருந்தது என்றேன்.
நீ சிறிது நேரம் புரியாமல் பின் மண்டையில்
குட்டி விட்டு சொன்னாய் - அது கானல் நீரென்று!
__________________________________________________________________________________

உன்னுடன் இருக்கும் காலங்களில் அதீத
சந்தோசத்துடன் இருக்கிறேன்..
நீ இல்லாத நாட்களில் மிக துக்கத்துடன்
இருக்கிறேன் - நடுநிலையாய்
நான் இப்போதெல்லாம் இருந்ததில்லை
__________________________________________________________________________________

கட்டி அணைத்தால் நீ உருகி விடுவாயோ
என்ற பயம் எனக்கு எப்போதும் உண்டு...!
__________________________________________________________________________________

எவ்வாறு தூக்கம் வருவது தெரியாதோ
அது போல் எனக்கு காதல் வந்ததும் தெரியவில்லை
__________________________________________________________________________________

நாம் இருவரும் கடந்து போகும் போது
பேசிக்கொள்ளும் இரண்டொரு வார்த்தைகளுக்காக
இரவு முழுவதும் கனவில் பயிற்சி எடுத்துக் கொண்டுயிருக்கிறேன்
__________________________________________________________________________________

எனக்கான கவிதையை உன்னுடைய
பாவனைகளில் ஒளித்து வைத்துஇருக்கிறாய்
____________________________________________________________________

நீ கணினி முன் அமர்ந்து விட்டாய்
இப்போது மவுஸை தொடப்போகிறாய்..
நானோ கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன்!
மவுஸ் சாப விமோசனம் பெற்று
எந்த ராஜகுமாரனாகவும் ஆகிவிடக்கூடாதென்று...
____________________________________________________________________

நான் உனக்கான காதலை தேக்கி வைத்திருக்கிறேன்
நீ எங்கு இருக்கிறாய் என்று தெரியாமலேயே!
_____________________________________________________________________

நீ என்னை கடந்து போகையில்
நான் அடையும் உற்சாகத்தை மறைக்க
நான் மிகவும் சிரமப்படுகிறேன்
_____________________________________________________________________

உன் அருகாமையில் உன் அழகால்
பாதிக்கப்படாதவன் போல் நடிப்பது
மிகக் கொடுமையானது...
____________________________________________________________________

இந்த கவிதைகளையெல்லாம் உனக்காக
நான் சமர்ப்பிக்க மாட்டேன் ஏனென்றால்
இவையெல்லாம் அமெச்சூர் கவிதைகள்
____________________________________________________________________

நீ என்னை பார்க்கும் சிற்சில வினாடிகளுக்காகத்தான்
நான் உயிர் வாழ்கின்றேன்
____________________________________________________________________

கண் மூடி நினைத்து பார்த்தால் எவருடைய
உருவத்தையும் நிறுத்தும் சகதி
எனக்கு இருந்ததில்லை உன்னை பார்க்கும் வரை
____________________________________________________________________

நான் Lancer ல் போகலாமென்று சொன்னேன்
நீ தான் Pulsar ல் போகலாமென்று அடம் பிடித்தாய்
இப்போது Traffic Jam ஆகி விட்டதென்று
புலம்பிக் கொண்டிருக்கிறாய் - அது
உன்னால் தான் ஆனது என்று உணராமலேயே!
____________________________________________________________________

எவ்வாறு இருந்தேன்
ஒரே ஊரில்
உன்னை பற்றி அறியாமல்
நான்கு வருடங்களாய்....
____________________________________________________________________

நீ கண்ணாடி அணிந்ததை பார்த்ததிலிருந்து
கண்ணாடி அணியாமல்இருக்கும் பெண்களெல்லாம்
ஏதோ ஒரு வகையில் முழுமையடையாதவர்கள்
போல் தோன்றுகிறது...
_____________________________________________________________________

ஐயோ!! இது மொக்க கவிதையென
நீ கைஎடுத்து கும்பிடும் அழகிலிருந்து
உனக்கான இன்னொரு கவிதை பிறந்தது....
_____________________________________________________________________

நீங்களெல்லாம் நாசமாய் போவீர்களென
திட்டிக் கொண்டிருந்தேன் - என்னவளைப்
பார்த்து சரியான பிகர்டா என மனதில்
நினைத்துக் கொள்ளும் அனைவரையும்..
_____________________________________________________________________

எனக்கு உன்னைப் போல் மகள்
வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது
அதற்காவது என்னைக் காதலியேன்!
______________________________________________________________________

தமிழ் வளர வேண்டும்


உன்னுடைய ஒவ்வொரு பாவனையையும்
பதிவு செய்ய நினைக்கிறேன் - ஆனால்
அதற்கு தமிழில் தகுந்த வார்த்தைகள் இல்லை
_______________________________________________________________________

உலகெங்கும் பெண்கள் இருக்க்கிறார்கள்
தேவதையாய் நீ மட்டும் தான் இருக்கிறாய்
_______________________________________________________________________

COLOURED

உனக்கு சிவப்பான பையன்கள் தான் பிடிக்கும்
என்று தெரிந்து மிகவும் வருத்தமுற்றேன்
'AutoCAD' software ல் இருப்பது போல்
'match properties' real life ல் இருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்குமென ஏககபபட்டேன்
_______________________________________________________________________

என்ன? என்று அருகில் வந்து கேட்கிறேன்
ஒண்ணுமில்லையே! என்று நீ சொல்லுகிறாய்
எத்தனை முறை சொல்லுவது மெதுவாக கண் சிமிட்டாதே என்று
அது நீ என்னை அருகே வா! என்று அழைப்பது போல் இருக்கிறது
________________________________________________________________________

உனக்காக வழக்கம் போல் காத்திருக்கிறேன்..
நீ வருவாயென ஒவ்வொரு கம்பெனி
பஸ்சிலும் தேடுகிறேன் - உன் முகத்தைக் கண்ட
அந்த ஒரு வினாடியில் தோன்றும் சிலிப்பிற்காக
எவ்வளவு வருடங்களானாலும் காத்திருக்கலாம்
_________________________________________________________________________

Technology பத்தாது

நான் கணினியில் எனது புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்
நீ எனது பின்புறமாக வந்து நின்றாய்
உனது முகத்தை திரையில் பார்த்த வேகத்தில்
Print screen அழுத்தி விட்டு உன்னிடம் பேச ஆரம்பித்தேன்.
நீ போன பிறகு MSword ல் paste பண்ணிப் பார்த்தால்
ம்ஹும்! எனது புகைப்படம் தான் அங்கே இருந்தது!
_________________________________________________________________________

எனக்கான பெண் இவள் தானா என்று எந்தவொரு
பெண்ணை முயற்சித்த போதெல்லாம்
தானாகவே தடை வந்து முறிந்திருக்கின்றன
உனக்கான முயற்சிகளில் மட்டும்
காதல் தேவதை வலிய வந்து உதவுகிறாள்
எனக்கானவள் நீ தானோ!! இல்லை
அந்த காதல் தேவதையே நீ தானோ!!
______________________________________________________________________________

உன்னிடம் பேசும் போது கால்களை அழுத்தமாக
தரையில் ஊன்றுகிறேன். நான் வானத்தில் பறந்து
விடக்கூடாதென்று...
_______________________________________________________________________________
திருத்தாது

ஒழுங்கா வேலயப் பார்
ஒழுங்கா வேலயப் பார்
என்று மனதிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்
நா, வேலயத்தான் பாக்குறேன்
என்று திரும்ப மனது உனது நினைவில் மூழ்கி விட்டது
__________________________________________________________________________________

நான் கடவுளிடம் எப்போதும் வேண்டிக் கொண்டிருக்கிறேன்
இந்த நிமிடம் உன்னுடன் இருக்க வேண்டுமென்று மட்டும்...
__________________________________________________________________________________

நான் ஆபிசுக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன்
முதலில் வாட்சை மறந்து வைத்து விட்டேன் - பிறகு
பர்சு அப்புறம் கம்பெனி ID... ம்ம்ம்ம்
இந்த காதலை சொல்லாமல் எத்தனை காலம் தான்
இந்த பாடு படப் போகிறேனோ!!!
__________________________________________________________________________________

திருத்தாது -2
சமூகம் பார்க்கும் பார்வை மிகக் குருரமானது
அதற்கு உறுத்தாதபடி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது
__________________________________________________________________________________

என்ன செய்ய!

உனக்கு தமிழ் படிக்கத் தெரியுமா?
என்று தெரியாமலேயே தமிழில்
கவிதை எழுத ஆரம்பித்து விட்டேனே!
__________________________________________________________________________________

விளையாட்டு என நினைத்தாயோ!

நீ என்னை டென்னிஸ் ஆடக் கூப்பிட்டாய்
Love All என்ற தத்துவத்தை சொல்லி ஆரம்பித்தாய்.
விளையாட்டு முடிந்ததும் என் காதலை சொன்ன போது
மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறாய்?
__________________________________________________________________________________

எப்போது என்னுடைய உயிரை எடுத்தாய்?
நான் நடைபிணமாய் இருக்கிறேன்
சீக்கிரம் வந்து உயிர் கொடு!
__________________________________________________________________________________

நாளை பார்க்கலாம் என்று கிளம்பிப் போய் விட்டாய்
இப்போது தான் காலையும் மாலையும் சாப்பிடாததால்
உண்டான பசி உயிரை எடுக்க ஆரம்பித்திருக்கிறது
__________________________________________________________________________________

நானும் நீயும் ஒரே நிறத்தில் உடை அணிந்ததற்காக
same pinch என்று சொல்லி குதூகலிக்கறாய்
நான் உனக்காகவே இருப்பது பற்றி
கண்டு கொள்ள மாட்டேன் என்கிறாய்
__________________________________________________________________________________

என்னால் உலகத்தை இரண்டாக மட்டுமே பார்க்க முடிகிறது
நீ என்னோடு இருக்கும் போது இருக்கும் ஒரு உலகம்
இல்லாமல் இருக்கும் போது இருக்கும் மற்றொரு உலகம்
__________________________________________________________________________________

உன்னிடம் பேசும் நிமிடங்களைப் போல்
பேசப் போகிறோமென்ற உணர்வும் என்னை
அதிக சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது
__________________________________________________________________________________

காதல் தவிர

நட்பு

பயணங்களின் போது நீ வாங்கும் மினரல் வாட்டர்,
மேகசின், பிஸ்கட்களில் மட்டுமல்லாமல்
மச்சான் பக்கத்து சீட்டில் ஃபிகர்
ஏதாவது இருக்குதான்னு பாத்துக்கடா என்று
சொல்லும் அக்கறையிலும் கிளை விட்டிருக்கிறது
நமது நட்பு